தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேன் மோதி வாகனங்கள் சேதம்

கொடைக்கானல், நவ.11: கொடைக்கானலில் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான பைன் மரக்காடுகள் உள்ள பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் ஏற்றமான சாலை உள்ளதால், அதில் வாகனங்கள் பயணம் செய்வதுடன் சற்று சிரமமாக இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று வடமதுரையில் இருந்து வேனில், பயணிகள் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது இந்த பைன் மர காடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்டு, ஏற்றமான சாலையில் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது வாகனம் பின்புறமாக நகர்ந்து செல்லாமல் இருக்க, பின் பக்க டயருக்கு ஓட்டுநர் கல் வைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக வேன், பின்னோக்கி நகர்ந்து ஓடியது. இதில் வலது மற்றும் இடது பக்கங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் மோதியது. இந்த விபத்தில் கார் உள்ளிட்ட 4 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் வாகனங்களில் யாரும் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக பைன் மர காடு சுற்றுலா தலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement