தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சில்லமரத்துப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் குறுவட்ட போட்டியில் சாம்பியன்ஷிப்

போடி, ஆக, 9: குறுவட்ட போட்டியில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். போடியில் அரசு உதவி பெறும் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் குறு வட்ட விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடை பெற்றது. 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான இந்த விளையாட்டுப் போட்டி மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளும் பங்கேற்று விளையாடின. இந்தப் பள்ளியில் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த குறு வட்ட போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் சிறந்த பள்ளியாக சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

குறிப்பாக தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அதற்காக விளையாட்டு வீரர்களின் வெற்றிக்காகப் பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தெய்வேந்திரன், ஆசிரியை பிரியதர்ஷினி ஆகியோரையும், வெற்றி பெற்ற வீரர்களையும் தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.