தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரியகுளத்தில் நகர்மன்ற கூட்டம்

தேனி, ஆக. 8: பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் தமிஹாசுல்த்தானா, நகராட்சி பொறியாளர் சந்தோஷ்குமார், மேலாளர் தியாகராஜன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின்போது, 10வது வார்டு திமுக கவுன்சிலர் ஆபிதாபேகம், பெரியகுளம் புதிய பஸ்நிலையம் எதிரே செயல்படும் தனியார் மதுபானக் கூடத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர், பஸ்நிலையம் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நகர்மன்றத் தலைவர் இருக்கை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தபோதும், கவுன்சிலர் ஆபிதாபேகம் தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார். இதனையடுத்து, நகர்மன்றத் தலைவர் சுமிதாசிவக்குமார், மதுபானக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, கவுன்சிலர் போராட்டத்தை விட்டு இருக்கைக்கு சென்றார். இதனால் நகர்மன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related News