தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னமனூர் அருகே மர்மபொருள் வெடித்து மாட்டின் வாய் சிதறியது

 

Advertisement

 

சின்னமனூர், அக். 7: சின்னமனூர் அருகே, மேய்ச்சலின்போது மர்மப் பொருள் வெடித்து எருமை மாட்டின் வாய்ப்பகுதி சிதறியது.

சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் கலையரசன். இவர் எருமை மாடு பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எருமை மாடு ஒன்று எரசக்கநாயக்கனூர் சின்ன ஓவுலாபுரம் பிரிவு பழைய டாஸ்மாக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வாய்க்கால் மேட்டில் செடி கொடிகள், புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு கிடந்த மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதில் எருமையின் முகம் சிதைந்து ரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் இதைப் பார்த்து கலையரசனுக்கு தகவல் கொடுத்தனர். இதையறிந்த கலையரசன் அந்த எருமையை உடனடியாக கேரள வியாபாரியிடம் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். வெடித்தது வெடிகுண்டா அல்லது பன்றிக்காக வைக்கப்பட்ட கன்னிவெடியா அல்லது வேறு ஏதேனும் வெடிபொருளா, சதிச்செயலுக்காக புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement