தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பம் பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

கம்பம், ஆக.7: கம்பத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆய்வு செய்தார். கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 90 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனை கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேரில் ஆய்வு செய்தார்.

Advertisement

கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 15வது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் 31வது வார்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியையும், கம்பம் நகராட்சி உழவர் சந்தை பகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.178 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் உமா சங்கர், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் சாதிக், ரோஜாரமணி, வார்டு பொதுமக்கள் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement