தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நாளை நடக்கிறது

தேனி, ஆக.7: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை சிறப்பு கைத்தறி கண்காட்சி நடக்க உள்ளது. கிராமப்புற பகுதிகளில் வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக கைத்தறி உள்ளது. கடந்த 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், உள்நாட்டுத் தொழில்களை, குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்தது.

அந்த வகையில், கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பொருளாதாரா ரீதியாக மேம்படுத்துவதற்கும், அவர்களின் நேர்த்தியான கைவினைத்திறனின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்து கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் ஆக.7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

11-ஆவது தேசிய கைத்தறி தினவிழாவையொட்டி நாளை (8ம் தேதி) கைத்தறித்துறையின் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி நடக்க உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைக்க உள்ளார். இக்கண்காட்சி காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ரகங்கள் அரசு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

 

Related News