தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 50 அடியாக சரிவு: விவசாயிகள் கவலை

தேனி, ஆக.6: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 50 அடியாக குறைந்தது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. மொத்தம் 126.28 அடி உயரமுள்ள இந்த அணையில் தேக்கப்படும் நீரினை கொண்டு, தினந்தோறும் நகராட்சி பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நடப்பாண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில், தற்போது நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் குறைந்து 49.13 அடியாக உள்ளது.

அணையில் நீர் இருப்பு 15.34 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில் பெரியகுளம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபநீர் வெளியேறி வந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் சரிந்துள்ளதால் விவசாயிகளை கவலை அடைந்துள்ளனர்.