தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமுளி அருகே காஸ் ஏஜென்சி ஊழியர்களை தாக்கிய தந்தை, மகன் கைது

மூணாறு, அக். 4: இடுக்கி மாவட்டம் குமுளி ஊராட்சிக்கு உட்பட்ட அணைக்கரை பகுதியில் எரிவாயு இணைப்பு வழங்கச் சென்ற ஏஜென்சி ஊழியரைத் தூணில் கட்டி வைத்துத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கரை அருகே மேல்வாழவீடு என்ற பகுதியில் வசித்து வரும் சில வெளி மாநில தொழிலாளர்களுக்கு புதிய எரிவாயு இணைப்பு மற்றும் விநியோகத்திற்காக வெள்ளாறம்குன்று பகுதியில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சியின் ஊழியர்களான ஜிஸ் மோன் சன்னி (28) மற்றும் ப்ரதீக்ஷா ஆகியோர் கடந்த 1ம் தேதி புதன்கிழமை மாலை சென்றுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் அப்பகுதியில் எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை நடத்தும் பால்பாண்டி, அவரது மகன் அசோகன் ஆகியோர் தங்களது விற்பனை பாதிக்கப்படும் என்று கூறி எரிவாயு ஏஜென்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பால்பாண்டி மற்றும் அசோகன் ஆகியோர் ஜிஸ் மோன் சன்னியை கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தடுக்க முயன்ற பெண் ஊழியரையும் ப்ரதீக்ஷாவையும் அங்கிருந்த பெண்கள் தாக்கி, அவதூறாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வண்டன்மேடு போலீசார் ஜிஸ் மோன் சன்னி மற்றும் ப்ரதீக்ஷா ஆகிய இருவரையும் மீட்டு அருகில் உள்ள கட்டப்பணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பால்பாண்டி, அவரது மகன் அசோகன் ஆகிய இருவரையும் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

 

Advertisement

Related News