தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

தேவதானப்பட்டி, அக். 4: தேவதானப்பட்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மேல்மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் ஊராட்சி 12வது வார்டு அம்மாபட்டி தெருவில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆலமரத்து முனியாண்டிகோயிலில் இருந்து மேல்மங்கலம் பஸ் ஸ்டாப் வரை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பொதுப்பாதை 15 அடி அகலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த பொதுப்பாதையில் சரக்கு வாகனங்கள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவந்தன. இந்நிலையில் தனியார் சிலர் வீட்டின் முன்பு இரும்பு வேலி அமைத்து, பொதுப்பாதையை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மேல்மங்கலம் ஊராட்சிமன்ற நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர்கள், மேல்மங்கலம் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஜெயமங்கலம் காவல் நிலைய எஸ்.ஐ முருகபெருமாள், விஏஓ ராஜவேல் மற்றும் போலீசார், முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.

 

Advertisement

Related News