தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி நகராட்சியில் ரூ.67.76 கோடியில் பாதாள சாக்கடை விரிவாக்கம்: நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

 

Advertisement

தேனி, ஆக.31: தேனி-அல்லிநகரம் நகர்மன்ற அவசரக் கூட்டம் தேனி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்திற்கு தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகர் மன்ற துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின்போது, தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.

இதில் 7 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாகவும், 26 வார்டுகளில் பகுதியாகவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விடுபட்ட மற்றும் விரிவாக்க பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ.67 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் மூலம் ரூ. 16 கோடியே 60 லட்சம் கடன் பெறுவதற்கும், ரூ.50 கோடியே 63 லட்சம் மானியம் பெறுவதற்கும் ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இததீர்மானமானது அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Related News