தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்பு செடி, கொடிகள் அகற்றம்

சின்னமனூர், நவ.27: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பிரிவில் இருந்து வேப்பம்பட்டி, அழகாபுரி வழியாக தேனிக்கும், வருசநாடு கண்டமனூர் பிரிவுக்கும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் சீலையம்பட்டி பிரிவில் துவங்கி சமத்துவபுரம், வேப்பம் பட்டி, காமாட்சிபுரம், அழகாபுரி பிரிவு வரை இரு புறங்களிலும் சாலையை மறைக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்தும், முட்புதர்களாகவும் காட்சியளித்தது. இந்த சாலையில் தொடர்ச்சியாக பஸ்கள், விவசாய வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இதனால் எதிரெதிரே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், வளைவுகளில் எதிரேவரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

Advertisement

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சாலையை மறைக்கும் வகையில் ஆக்கிரமித்து வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி, பள்ளமாக இருந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது சாலை தெளிவாக தெரிவதுடன் விரிவாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் சென்று வரும் வாகன ஓட்டுநர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement