தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்

தேனி, நவ.26: பெரியகுளம் அருகே அக்காள் கணவனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால்(48). இவரது மனைவி தங்கமலை(43). தேனி அருகே சங்ககோணாம்பட்டியில் தங்கமலைக்கு சொந்தமான வீட்டுமனை இடம் அருகே, தங்கமலையின் சகோதரர் ஜெயராம்(45) குடியிருந்து வந்தார். தங்கமலைக்கு சொந்தமான இடத்தை ஜெயராம் வாங்க நினைத்திருந்தார். இந்நிலையில், அந்த இடத்தை தங்கமலை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தார். இதனால் ஜெயராமுக்கும், தங்கமலைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்.27ம் தேதியன்று, தங்கமலை மற்றும் கணவர் ஜெயபால், வீட்டை வாங்கியவர்களுக்கு அளந்து கொடுப்பதற்காக வந்தனர். அப்போது, ஜெயராம் மற்றும் அவரது மனைவி முத்துப்பிரியா ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது, ஜெயராம் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியால், அவரது அக்காள் கணவரான ஜெயபாலை முதுகில் குத்தினார். இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் ஜெயராம், அவரது மனைவி முத்துப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா முன்னிலையில் நடந்து வந்தது.

அரசு தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், முத்துப்பிரியாவை வழக்கில் இருந்து விடுவித்தும், ஜெயராமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

Advertisement