தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்

 

Advertisement

தேனி, ஆக. 19: தபால் துறையின் சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால்தலை சேகரிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் கூறியதாவது, அஞ்சல் துறையின் சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் கல்வி உதவித்தொகை திட்டம் தபால் தலை சேகரிக்கும் மாணவ - மாணவிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியர்கள் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தபால் தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த உதவித்தொகை தொடர்பான விபரங்களுக்கும், விண்ணப்பத்தையும் www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை மாணவ, மாணவியர்கள் வருகிற செப்டம்பர் 1. ம் தேதிக்குள் தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் மதுரை மண்டலம் மதுரை - 625 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

Advertisement

Related News