தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருத்தணி, ஏப். 23: திருத்தணி அருகே திரவுபதி அம்மன் திருக்கோயிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருத்தணி அருகே புச்சிரெட்டிபள்ளியில் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி திருக்கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவில் தெருக்கூத்து நடைபெற்று வந்தது. விழாவில் பெண்கள் குத்து விளக்கு பூஜை, அம்மன் கிராம வீதியுலா, தபசு, துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை தீமிதி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடைகள் உடுத்தி வேப்பிலையுடன் கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து மாலை 7 மணி அளவில் கோயில் அக்னி குண்டம் முன்பு வந்தடைந்தனர். சிறப்பு மலர் அலங்காரத்தில் அக்னி குண்டம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் திரவுபதி அம்மன் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலில் குவிந்து கோவிந்தா, கோவிந்தா முழக்கங்களுடன் பூங்கரகம் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் பயபக்தியுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதனை அடுத்து வாண வேடிக்கை நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் திருத்தணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி குமார், ஒன்றிய கவுன்சிலர் நீலா கோவிந்தசாமி உட்பட கிராம மக்கள் பெருந்திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தீமிதி திருவிழாவில் நேற்று காலை தருமராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது.

Advertisement