தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திரவுபதி அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்

 

Advertisement

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்களம் மோட்டூர், பைவலசா ஆகிய கிராமங்களில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதித் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு கட்டை கூத்து நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் 8 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு மேல் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழபிட்டனர். அதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் இரவு உற்சவ திரவுபதி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து ஆடலும், பாடலும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று தர்மர் பட்டாபிேஷகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement