தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கமிட்டியை அமைத்துபென்ஷன் உயர்வை அமல்படுத்த வேண்டும்

குளித்தலை, ஜூலை 7: ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கமிட்டியை அமைத்து பென்ஷன் உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

கரூர் மாவட்டம் குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்க ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பேரவை கூட்டம் குளித்தலை வைகைநல்லூர் அக்ரஹாரம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்க துணைத் தலைவர் இன்ஜினியர் பழனிவேலு தலைமை வகித்தார். சங்க கொடியை சங்க தணிக்கையாளர் பழனியாண்டி ஏற்றி வைத்தார். சங்கத் தலைவர் பொன்னம்பலம் விழா ஒரு ங்கிணைப்பு செய்திருந்தார். துணைச் செயலாளர் இன்ஜினியர் கண்ணன் சங்க ஆண்டு அறிக்கை மற்றும் தீர்மானங்கள் வாசித்தார். சங்கப் பொருளாளர் மகாலிங்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக அரசு தலைமைச் செயலக சங்க தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில தலைவர் மாணிக்கம், பொதுச் செயலாளர் முத்துக்குமார வேலு, திருச்சி மண்டல தலைவர் டெஸ்மா மாணிக்கம் ராமசாமி, ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் பஞ்சப்படி உயர்வை தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே நிலுவைகள் எதுவும் இன்றி தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.1.1.2016ல் உயர்த்தப்பட்ட பென்ஷன் உயர்வு வரும் 31. 12 .2025ல் 10 ஆண்டுகள் முடிவடைகிறது என்பதால், 1.1.2026 ல் பென்ஷன் உயர்வு வழங்கப்பட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கமிட்டியை விரைவாக அமைத்து கமிட்டியின் பரிந்துரைகளை பெற்று 1.1.2026 முதல் பென்ஷன் உயர்வை அமல்படுத்த வேண்டும். பென்சன் நிதியை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆக உய ர்த்தி வழங்க வேண்டும்.

2023 ம் ஆண்டுக்குப் பிறகு வாரிய பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் நரசிங்கம் நன்றி கூறினார்.

Advertisement