தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேங்காய் விலை உயர்ந்ததால் இளநீர் வரத்து குறைந்தது

 

Advertisement

திருப்பூர், ஜூலை 7: இளநீர் அருந்துவது வெயில் காலத்தில் மட்டுமல்லாது உடல் சூட்டை குறைப்பதற்காக அனைத்து காலங்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அருந்தக்கூடிய பானமாக இருந்து வருகிறது. திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு,கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.கடந்த சில தினங்களாக தேங்காய், கொப்பரை விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் இளநீர் பறிப்பதை நிறுத்தி தேங்காய் அறுவடைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இளநீரை விட தேங்காய் விலை அதிகம் விற்பனையாக கூடிய நிலையில் இளநீர் பறிப்பது நிறுத்தப்பட்டதால் திருப்பூருக்கு வரும் இளநீர் வரத்து குறைந்தது

அதே நேரத்தில் தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் இவை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மழைப்பொழிவு குறைந்தது மற்றும் இயற்கை சூழல் காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் பிடிப்பது குறைந்ததன் காரணமாக, வரத்து குறைந்திருப்பதாகவும் அதன் காரணமாக விலை அதிகரித்து இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக தேங்காய் எண்ணெய் விலையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

Advertisement