தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குப்பை பிரிக்கும் மையத்தை நகராட்சிகளின் மாநில இணை இயக்குனர் திடீர் ஆய்வு வந்தவாசி நகராட்சியில் உள்ள

வந்தவாசி, ஜூலை 27: வந்தவாசி நகராட்சியில் உள்ள குப்பை பிரிக்கும் மையத்தை நகராட்சிகளின் மாநில இணை இயக்குனர் திடீரென ஆய்வு செய்தார். நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் சா.லட்சுமி நேற்று வந்தவாசி நகராட்சியில் குப்பை பிரிக்கும் மையத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து அதனை உரமாக மாற்றி விற்பனை செய்வது குறித்து விபரம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து அக்பர் சாலையில் குடிநீர் குழாயில் வரும் தண்ணீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

மேலும் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா, மேலும் அனைத்து தெருவிளக்குகளும் எரிகின்றதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, பொறியாளர் கோபு, மேலாளர் ஜி.ரவி துப்புரவு ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலரும் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் வந்த இணை இயக்குனரை நகராட்சி தலைவர் எச்.ஜலால், துணைத்தலைவர் கா.சீனிவாசன் வரவேற்றனர். அப்போது நகராட்சி தலைவர் ஜலால் ஆரணி சாலை கோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தும் சுக நதி ஒட்டியவாறு உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் ஏரி சாலையில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். நகராட்சிக்கு ஆணையாளர் இல்லாததால் நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்ய வேண்டும். கட்டிட ஆய்வாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக உருவாக்கி உள்ள பகுதிகளில் மழை நீர் கால்வாய், சிமெண்ட் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதி அளித்தார். அப்போது கவுன்சிலர்கள் எம்.கிஷோர் குமார், நூர்முகமது உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

Advertisement

Related News