தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரியலூர் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி முன்வர வேண்டும்

 

அரியலூர், ஜூன் 13: அரியலூர் நகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் நகராட்சி பெரியார் நகரில் உள்ள தெருக்களில் போடப்பட்ட சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக இருப்பதால், அவ்வழியாக நடந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. மண் சாலைகளில் களிமண் அதிகம் இருப்பதால் சிலர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.

இதே போல், இவ்வழியாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் அதிகம் உண்டு. இந்த பெரியார் நகரில் அரசு அலுவலர்கள் பலர் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இந்த சாலைகளை விரைவில் சீரமைத்து தருவதோடு, மண் சாலைகளை மெட்டல் சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும் என பெரியார் நகர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.