தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.1.33 கோடியில் மடம், தேர் கொட்டகை அமைக்கும் பணி பூமி பூஜையிட்டு எம்பி தொடங்கி வைத்தார் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில்

சேத்துப்பட்டு, ஜூலை 8: ேதவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.1.33 கோடியில் புதிய மடம், தேர் கொட்டகை அமைக்கும் பணியை எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருத்தேர் மற்றும் அம்மன் தேர் நிறுத்த புதிய கொட்டகை அமைப்பதற்கும், கோயில் எதிரே உள்ள சுந்தரமூர்த்தி மடத்தில் புதிய மடம் கட்டிடம் கட்டுவதற்கும் இந்து அறநிலையத்துறை ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை விழா நேற்று கோயில் வளாகம் மற்றும் மடத்தில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்பி எம்.எஸ் தரணிவேந்தன் கலந்து கொண்டு பூஜை பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில், ஒன்றிய செயலாளர்கள் துரைமாமது, அன்பழகன், மோகன், நகர செயலாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News