தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ிந்தாமணி புதூரில் அடிக்கடி உடையும் குடிநீர் பிரதான குழாய்

சூலூர், ஜூலை 14: கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி சிந்தாமணிபுதூர் பகுதியில் பில்லூர் திட்ட குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் உள்ளது. இது பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு மட்டுமே தண்ணீர் வரும் பாதையாக உள்ளது. இந்நிலையில் பிரதான குழாயில் வாரம் ஒரு முறை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து குழாய் சரிபார்ப்பு பணிகளுக்காக சாலையை தோண்டும்போது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாளுக்கு மேலாக சிந்தாமணிபுதூர் பகுதியில கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்தும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Related News