தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ நிலக்கடலை ரூ.73க்கு அதிகப்பட்ச ஏலம்

க.பரமத்தி, மே15: சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை விலை கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல் ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புன்னம், தென்னிலை, துக்காச்சி ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

Advertisement

மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலை தேவை அதிகரிப்பால் வியாபாரிகள் போட்டிக்போட்டு கொண்டு விவசாய நிலத்திலேயே கொள்முதல் செய்கின்றனர். தற்போது வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் பல விவசாயிகள் நிலக்கடலையை காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். பிறகு மீதம் உள்ள கடலையை கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு ஏலத்தில் விற்பனை செய்வதற்காக செல்கின்றனர்.

அங்கு இரண்டு தினங்களுக்கு முன் நடந்த ஏலத்தில் 570 மூட்டை நிலக்கடலை ஒரு கிலோவுக்கு குறைந்த பட்சமாக ரூ.60க்கும், அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு ரூ.73க்கும் ஏலம் போனது. கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல் ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement

Related News