தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர இறுதி கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது

ஊட்டி, ஜூன் 27: ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை 28ம் தேதி நடக்கிறது. இதில், கலந்தாய்வில் கலந்து இடம் கிடைக்காத, இதுவரை கலந்தாய்விற்கு அழைக்கப்படாத மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் ராமலட்சுமி கூறியிருப்பதாவது, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிந்து விட்ட நிலையில் சில துறைகளில் மட்டும் இன சுழற்ச்சி அடிப்படையில் சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. இன்னும் பல துறைகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து கலந்து கொள்ளாத மாணவர்கள் மற்றும் கலந்தாய்வில் கலந்து இடம் கிடைக்காத மாணவர்கள் நாளை 28ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கலந்தாய்வில் பங்கு பெறலாம்.

Advertisement

மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பித்து இதுவரை கலந்தாய்விற்கு அழைக்கப்படாதவர்கள் அதற்கான இன சுழற்ச்சி அடிப்படையில் கீழ்க்கண்ட துறைகளுக்கு மாணவர்கள் வரலாம். இதன்படி தாவரவியல் துறைக்கு பிசி., எம்பிசி., மற்றும் எஸ்சிஏ., மாணவர்களும், சுற்றுலாவியல், வரலாறு (தமிழ்வழி), இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். வணிகவியல் (1 ஷிப்ட்) துறைக்கு வெக்கேஷ்னல் குரூப் படித்த பிசி., எம்பிசி., எஸ்சி., மற்றும் எஸ்சிஏ., மாணவர்களும், வணிகவியல் (2 ஷிப்ட்) துறைக்கு வெக்கேஷ்னல் குரூப் படித்த பிசி., எம்பிசி., மாணவர்களும், வணிகவியல் (ஐ.பி) துறைக்கு பிசி., மற்றும் எம்பிசி., மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

மின்னணுவியல் துறையில் உள்ள இடங்களுக்கு பிசி., எம்பிசி., எஸ்சி., மற்றும் எஸ்டி., மாணவர்களும், விலங்கியல் துறையில் உள்ள இடங்களுக்கு பிசி., எம்பிசி., எஸ்சி., மாணவர்கள் கலந்து கொள்ளலாம்கலந்தாய்விற்கு வரும் போது 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல்பக்கம் என அசல் மற்றும் 6 நகல்கள் எடுத்து வர வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 எடுத்து வர வேண்டும். கட்டண விகிதம் மாநில பாடத்திட்டம் ரூ.4500ம், இதர பாட திட்டம் ரூ.5000 ஆகும். இவ்வாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News