தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

ஆரல்வாய்மொழி, செப்.5: தோவாளையில் செக்கர்கிரி சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது .இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 6ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை கணபதி ஹோமமும், விக்னேஸ்வரர் பூஜையும், பின்னர் கும்பத்தில் புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து முதல் யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. 7 ம் தேதி காலையில் 2ம் கால யாகசாலை பூஜையும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8ம் தேதி யாகசாலை பூஜையும் காலை 7.40 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் செக்கர்கிரி வேலவனுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. 11.30 மணிக்கு அன்னதானமும் இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாதரனையும் நடைபெறுகிறது. முன்னதாக 6ம்தேதி புதியதாக கட்டப்பட்டுள்ள தோரணவாயிலை முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் திறந்து வைக்கிறார். கும்பாபிஷேக தினத்தன்று நடைபெறும் அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் மகமை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News