தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மனுவிற்கு ஒரே நாளில் தீர்வு முதியோர் உதவித்தொகை ஆணையை வீடுதேடி சென்று வழங்கிய கலெக்டர்

 

விருதுநகர், ஜூலை 24: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனு அளித்த மூதாட்டியின் மனுவிற்கு, ஒரே நாளில் பரிசீலித்து முதியோர் உதவித்தொகை ஆணையை மூதாட்டி இல்லம் தேடி சென்று கலெக்டர் வழங்கினார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மூதாட்டி சந்திரா(75).

இவர் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனு அளித்தார். மனுவை பரிசீலித்து, அவரின் வீட்டிற்கு கலெக்டர் சுகபுத்ரா நேரில் சென்று சந்திராவிடம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

முன்னதாக, குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவு தயாரிப்பிற்கான மூலப் பொருட்களின் தரம் குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெறுவதை ஆய்வு செய்தார். நிகழ்வில் சிவகாசி வட்டாட்சியர் லட்சம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.