தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.2.85 கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி இறங்கு தளத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்

கொள்ளிடம், மே 29: கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி இறங்கு தளத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

தொடர்ந்து 2020-2021 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கொடியம்பாளையம் கிராமத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க அறிவிப்பு வௌியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவுற்ற நிலையில், நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மீன்பிடி இறங்கு தளம், படகு அணையும் சுவர், மீன் ஏலமிடும் கூடம், வலை பின்னும் கூடம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர்கள் ஜெயபிரகாஷ், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மீன்வளத்துறை ஆய்வாளர் துரைராஜ், மீன்வளத்துறை அதிகாரிகள், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News