தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புவனகிரி அருகே மருதூரில் ரூ.3.50 கோடியில் வள்ளலார் அவதரித்த இல்லம் புதிதாக கட்டும் பணி காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

புவனகிரி, ஜூன் 19: புவனகிரி அருகே மருதூரில் ரூ.3.50 கோடியில் வள்ளலார் அவதரித்த இல்லம் புதிதாக கட்டும் பணியை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisement

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் ராமலிங்க சுவாமி பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் ஆகும். இந்த கிராமத்தில் அவரது அவதார இல்லம் உள்ளது. இந்த அவதார இல்லத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பழுதடைந்த நிலையில் இருந்த வள்ளலார் அவதார இல்லத்தை புதிதாக கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து புதிய இல்லம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை நேற்று காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதி தலைமையில், திருஅருட்பா அகவல் பாராயணம் பாடப்பட்டு, சிறப்பு வழிபாட்டுடன் பூமிபூஜை நடந்தது. இதில் திமுக முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர்கள் மனோகரன், வெற்றிவேல், வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி கோட்ட பொறியாளர் முத்துக்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் அழகானந்தன், வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கிஷோர், ராமலு, கனகசபை, கனகலட்சுமி மற்றும் சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News