தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் தேர்த்திருவிழா அக்.6ம் தேதி நடக்கிறது

சோமனூர்,செப்.26: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பேராலயத்தின் இந்தாண்டு தேர்த்திருவிழா நாளை (27ம்தேதி)கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நூற்றாண்டு பிரசித்தி பெற்ற கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கோவை மறை மாவட்டத்திற்கு முதன்மை கோவிலாகவும், தாய் கோயிலாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு அடுத்தபடியாக கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை ஆலயத்தை பசலிக்கா திருத்தலமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் ஆறாவது திருத்தலமாக செயல்படுகிறது.வரலாற்றுச் சிறப்பும், ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து மதத்தவரும் வந்து தரிசிக்ககூடிய பொது பேராலயமாக கருமத்தம்பட்டி ஜெபமாலை அன்னை கோவில் விளங்குகிறது.

இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகின்ற அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (27ம் தேதி) கொடியேற்றம் நடக்கிறது. ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கோவை மறை மாவட்ட முதன்மை குருஜான் ஜோசப் தனிஷ் தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். நாளை காலை கொடியேற்றத்துடன் இவ்வாண்டு தேர்த்திருவிழா துவங்குகிறது.

Related News