தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூரில் நவீன வசதிகளுடன் நூலக கட்டிடம் பட்டாம்பி அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட மண் குவியல் முன்னெடுப்பே மூலதனம்

ஊட்டி, ஆக. 4: குன்னூரில் நூலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பழைய பள்ளி கட்டிடத்தை நகராட்சி துணைத்தலைவர் மற்றும் ஆணையாளர் ஆய்வு செய்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக, குன்னூர் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, நூலகம் அமைப்பதற்கு நகராட்சி சார்பாக இடம் தேர்தெடுக்கப்பட்டது. 9 வது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி நீண்ட நாட்களாக செயல்படாத நிலையில், அந்த பள்ளியை நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றுவதற்கு நகராட்சி சார்பாக முடிவு செய்யப்பட்டது.

Advertisement

இதனை தொடர்ந்து, நகராட்சி துணைத்தலைவர் வாசிம்ராஜா மற்றும் ஆணையாளர் சசிகலா ஆகியோர் அந்த இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர். இதற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்தப்பின் ஓரிரு மாதங்களில் நூலகம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி துணைத்தலைவர் தெரிவித்தார். உழவர் சந்தைக்கு அருகே உள்ள நூலகம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த பகுதி புதர்மண்டி கிடப்பதால் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அந்த நூலகத்திற்கு சென்று வர அச்சமடைந்து வருகின்றனர். தற்போது, நகர்பகுதியில் நூலகம் அமைப்பதற்கு நகராட்சியினர் முடிவு செய்துள்ள நிலையில் குன்னூர் நகர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement