தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானி ஆற்றில் மூழ்கிய மாணவர் சடலம் மீட்பு சித்திரை திருவிழா கோலாகலம் விளையாட்டு போட்டிகளில் 2000 பேர் பங்கேற்பு

மேட்டுப்பாளையம், மே 14: பவானி ஆற்றில் மூழ்கிய புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவர் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை மீட்டனர். புதுச்சேரி மாநிலம் பாகூர் மணமேடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் (46). இவரது மகன் ஆகாஷ் (21). கல்லூரி மாணவர். இவர் கடந்த 11ம் தேதி இரவு தங்களுக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி, பண்ணாரி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா முடித்து விட்டு மேட்டுப்பாளையம் வந்தனர்.

Advertisement

நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர், மேட்டுப்பாளையம் வெள்ளிபாளையம் சாலையில் உள்ள கருப்பராயன் கோயிலை ஒட்டி செல்லும் பவானி ஆற்றில் குடும்பத்துடன் ஆகாஷ் குளித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தீயணைப்பு வீரர்கள் பவானி ஆற்றில் மூழ்கிய ஆகாஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கண்டித்துறை என்ற இடத்தில் ஆகாஷ் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து அவரது உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News