தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பட்டுக்கோட்டை, செப்.27: பட்டுக்கோட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 618 மனுக்கள் பெறப்பட்டன. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

Advertisement

பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தொடங்கி வைத்தனர். நகர திமுக செயலாளர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் கனிராஜ், நகராட்சி கணினி உதவி திட்ட மேலாளர் எட்வின்ஆரோக்கியராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் லதாஆன்ட்ரோஸ், முருகேசன், ரகுராமன் மற்றும் 13 அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பட்டுக்கோட்டை நகராட்சி 28, 29, 30 ஆகிய 3 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 618 மனுக்கள் பெறப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 273 பேர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 38 பேர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு 21 பேர், தகவல் தொழில்நுட்பத்தில் 7 பேரும், வருவாய்த்துறைக்கு 154 பேரும், நகராட்சி நிர்வாகம் 55 பேர் என்று 618 மனுக்கள் பெறப்பட்டது.

 

Advertisement