தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை அருகே எஸ்பிஐ நிதி விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர், ஆக.20: தஞ்சாவூரை அடுத்த நரசநாயகபுரம் கிராமத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மண்டல மேலாளர் ஆண்டோலியோனார்ட் கலந்து கொண்டு கிராமத்தில் உள்ள அனைவரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் விபத்து காப்பீடு ரூ.20, மற்றும் ஆயுள் காப்பீடு ரூ.436 ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் விபத்து காப்பீடு இழப்பீடு தொகை ரூ.2 லட்சம், ஆயுள் காப்பீடு ரூ.2 லட்சம், பெறலாம் என்றார்.

Advertisement

மேலும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து மாதம் தோறும் பிரிமியம் தொகை செலுத்தினால் 60 வயதிற்கு பின் மாதம்தோறும் ரூ.5,000 பென்ஷன் பெறலாம். பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறினார். அதை தொடர்ந்து மண்டல அலுவலக மேலாளர் பழனிமுத்து, வங்கியில் உள்ள நிதி திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார். இந்த முகாமில் நரசநாயகபுரம் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக வங்கி துணை மேலாளர் கார்த்திகா நன்றி கூறினார்.

 

Advertisement