தஞ்சையில் 22ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஆக.20: தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், வரும் 22ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறும்படி தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement