தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவிடைமருதூர், அக்.13: திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராம சேவை மைய கட்டிடத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கிராம மக்களிடம் அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில்; வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற ஆட்சியை தொடர்ந்து மக்களுக்கு தருகின்ற ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

Advertisement

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில் ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு கடந்த காலத்தில் என்ன இருந்தது, என்ன செலவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் தெரிவிக்கப்பட்டு முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தமிழக முதலமைச்சர் கிராம சபையில் மக்களிடம் நேரடியாக பேசும் விதமாக அமைக்கப்பட்டிருந்த காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ராமலிங்கம், திருவிடைமருதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர.ஜெயபால், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், காந்திமதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement