தஞ்சையில் காலை உணவுத் திட்டகண்காணிப்பு குழு கூட்டம்
தஞ்சாவூர், ஆக.6: முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட கண்காணிப்புக் குழுவின் மாவட்ட அளவிலான மாதாந்திர கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதாகவும். தரமானதாகவும் வழங்குவதை அலுவலர்கள் தொடர் ஆய்வின் வழி கண்காணித்திட வேண்டும் எனவும், மைய பொறுப்பாளர்கள் வருகை, உணவுப்பொருட்கள் இருப்பு பதிவேடுகள் பாரமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்யவேண்டுமெனவும். முக்கியமாக காலவாதியான பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து உடன் அதனை மாற்றம் செய்திடவும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பொன்னியின் செல்வன், உதவி மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய துணை வடடார வளர்ச்சி அலுவலர்கள் (சத்துணவு), தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் அனைத்து மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர்கள் போன்ற பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.