தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்காட்டுப்பள்ளியில் ஒரு அதிசயம் மின்கம்பி ஆதாரத்தில், சாக்கடையில் நின்று கடமையை செய்யும் மின்கம்பம்: உயிர்பலி வாங்கும் முன் அகற்றப்படுமா?

திருக்காட்டுப்பள்ளி, செப். 2: திருக்காட்டுப்பள்ளியில் அடிப்பகுதி கட் ஆனாலும், மின் கம்பி ஆதாரத்தில், சாக்கடையில் நின்று கொண்டு கடமையை செய்து கொண்டிருக்கும் மின் கம்பம் கீழே விழுந்து உயிர் பலி வாங்கும் முன் அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளி ஐம்பதாம் நம்பர் ரோட்டில் உள்ள லாயத்தெருவில் இருந்த மின் கம்பம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கட்டாகி உள்ளது. அடிப்பகுதி கட் ஆனாலும், மின்கம்பத்தின் மேற்புறத்தில் இருபுறம் உள்ள மின் கம்பிகள், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள மின் ஒயர்களின் ஆதாரத்தில் சாக்கடைக்குள் நின்று கொண்டிருக்கிறது.

Advertisement

மின்கம்பியின் ஆதாரத்தில், சாக்கடைக்குள் நின்று கொண்டிருக்கும் இந்த மின் கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்ப்பட்டால், பலரின் உயிர் போகும் ஆபத்தான நிலை உள்ளது. இந்த மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்தால், சாக்கடை நீரிலும் மின்சாரம் பாயும், இதனால் சாக்கடை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் ஆபத்தான நிலை இங்கு நிலவி வருகிறது. திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரியபடுத்தியும், இது நாள் வரை உடைந்து, மின் கம்பிகளின் ஆதாரத்தில் சாக்கடையில் நின்று கொண்டிருக்கும் மின் கம்பத்தை மாற்றாமல், அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனிவரும் காலம் தொடர் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது. கீழ் பகுதியில் எவ்வித பிடிப்பும் இல்லாமல் நிற்கும், மின்கம்பம் காற்றடித்தால் கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படக்கூடும். மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் முன்பாக உடைந்து நிற்கும் மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News