தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணி செய்யாத பணியாளர்கள் பெயரில் 100 நாள் வேலை திட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி

தஞ்சாவூர், செப் 2: தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குருங்குளம் கிழக்கில் 2021ம் நிதி ஆண்டிலிருந்து 2025 வரை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்து ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் துணையோடு பல லட்சம் ரூபாய் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். இது குறித்து குருங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் கொடுத்து மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பல்வேறு வேலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணிக்கு வராதவர்களின் பணி அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடாத பணியாளர்களின் கையொப்பங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

பணி செய்யாத நபர்களின் பெயர்களில் உள்ள அட்டைகளை பயன்படுத்தி வங்கி கணக்கின் மூலம் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. பணி செய்யாத நபர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடாக மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு நிதியில், பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு உரிய நலத்திட்ட நன்மைகள் கிடைக்கவில்லை. எனவே குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யாத பணியாளர்கள் பெயரில் மோசடி செய்து பல லட்சம் ரூபாய் அரசு பணத்தை மோசடி செய்து சுருட்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement