தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாபநாசம் பள்ளியூரில் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுத்தும் சாலை: தண்ணீர் இல்லாமல் காட்சி பொருளான நீர்தேக்க தொட்டி

தஞ்சாவூர், செப். 2 : குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை மழைக்காலம் தொடங்கும் முன்பு விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பள்ளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கரடு முரடாக காட்சியளிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

Advertisement

மேலும் பள்ளியூரில் காணப்படும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வராமல், கிராம பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி எவ்வித பலனும் அளிக்காமல் காட்சியளிக்கிறது. குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கும் பணியினை மழைக்காலம் முன்பே தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும்.கிராம பொதுமக்களுக்கு பயனளிக்காமல் காணப்படும் நீர் தேக்க தொட்டியினை சுத்தம் ெசய்து, தண்ணீரை சேமித்து குழாய்களில் தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News