தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூழமந்தல் செய்யாற்றில் தைப்பூச விழா ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

Advertisement

காஞ்சிபுரம், ஜன.28: கூழமந்தல் செய்யாற்றில் தைப்பூச பெருவிழாவில், உற்சவ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் கிராமம் அருகே செல்லும் செய்யாற்றில் தைப்பூச பெருவிழா கடந்த 100 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் தைப்பூச பெருவிழாவில் கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரர், உக்கல் வைத்தியநாதசுவாமி, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர், மானாம்பதி வான சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட 21 கிராமங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் கரை ஓரங்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று, பல்வேறு அலங்காரங்களில் ஆற்றினுள் எழுந்தருளினார்கள்.

இதனையடுத்து ஒவ்வொரு சாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டு, அந்தந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்று, நேற்று காலை 4 மணியளவில் தைப்பூச விழா நிறைவுபெற்றது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement

Related News