தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டரசன்கோட்டையில் கோயில் தெப்பக்குள நீர் வெளியேற்றம்

சிவகங்கை, ஜூன் 3: நாட்டரசன்கோட்டை கோயில் தெப்பக்குளத்தில் இருந்த நீரை, முழுமையாக வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு, குடிநீர் தெப்பக்குளம் உள்ளது. ஆண்டு முழுவதும் நாட்டரசன்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய இக்குளம், பெரும்பாலும் கோடை காலத்திலும் வற்றுவதில்லை.

Advertisement

தற்போது கடுமையாக வெயில் அடிக்கும நிலையிலும், குளத்தில் ஓரளவு நீர் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குளத்தின் நடுவே உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதையடுத்து சிவகங்கை தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றினர். இறந்து கிடந்தவர் காளையார்கோவில் அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்த செல்வகணேசன் என்பது தெரியவந்தது.

இவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில், குடிநீர் குளம் அசுத்தமானதையொட்டி உடனடியாக கிணறு மற்றும் குளத்தில் இருந்த நீரை மொத்தமாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலைகள் இன்று (ஜூன் 3) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து குளத்தை சுத்தம் செய்யப்படும் பணிகளும் நடைபெற உள்ளது.

Advertisement

Related News