தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 நாள் சிறப்பு முகாமில் ரூ.26.46 லட்சம் வரி வசூல்

 

Advertisement

கோவை, அக். 29: கோவை மாநகராட்சி சார்பில், நடப்பு 2024-2025ம் நிதியாண்டில் அரையாண்டு வரையிலான, மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில், சிறப்பு வரி வசூல் முகாம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடந்தது. அதாவது, கிழக்கு மண்டலத்தில் 56, 7, 8 ஆகிய வார்டுகள், மேற்கு மண்டலத்தில் 37, 45, 33, 34 ஆகிய வார்டுகள், வடக்கு மண்டலத்தில் 25, 28 ஆகிய வார்டுகள், தெற்கு மண்டலத்தில் 85, 88, 96, 32 ஆகிய வார்டுகள், மத்திய மண்டலத்தில் 63, 70, 80 ஆகிய வார்டுகள் என மொத்தம் 16 வார்டுகளில் இம்முகாம் நடந்தது.

மேற்கண்ட இரு தினங்களிலும் கிழக்கு மண்டலத்தில் ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 806, மேற்கு மண்டலத்தில் ரூ.6 லட்சத்து 24 ஆயிரத்து 512, வடக்கு மண்டலத்தில் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 256, தெற்கு மண்டலத்தில் ரூ.6 லட்சத்து 63 ஆயிரத்து 579, மத்திய மண்டலத்தில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 76 என மொத்தம் ரூ.26 லட்சத்து 46 ஆயிரத்து 229 வரி வசூலானது. இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ‘’மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை உடனுக்குடன் செலுத்தி, மேல்நடவடிக்கையை தவிர்த்துக்கொள்வது நல்லது. வரியினங்களை முறையாக செலுத்தும்பட்சத்தில், மாநகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தடை எதுவும் இருக்காது’’ என்றார்.

Advertisement