தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சையில் டாஸ்மாக் தொழிலாளர் சங்க கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 25: காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம். பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் ராஜகோபால், ராமதாஸ், பழனி, மாநில செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் கோபு வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

Advertisement

தமிழ்நாடு மாநில பாரதிய மஸ்தூர் சங்க பொது செயலாளர் சங்கர் சிறப்புரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் நிறைவுரையாற்றினார். இந்த கூட்டத்தில், 22 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிவரன்முறை, பணி நிரந்தரம் போன்ற நியாயமானக் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்திட வேண்டும்.

எண்ட் டூ எண்ட் பரிவர்த்தனையில் விற்பனை செய்யும்போது கருவிகள் தரமற்றதாக இருப்பதால் அதில் ஏற்படும் தவறுகளுக்கு ஊழியர்களை பலிகடா ஆக்க கூடாது. ஊழியர்களுக்கு ரூ.2000 சம்பளம் உயர்த்தியது உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்ட செயலாளர். பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

Advertisement

Related News