தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்

 

Advertisement

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததின் பேரில், தென்காசி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன.

இருப்பினும் மேம்பாலம் பணி நடைபெறும் இடத்தில் சாலையின் இருபுறமும் தார்சாலை அமைக்கப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் இச்சாலையில் செல்லும் போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே துரித நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் சர்வீஸ் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement