தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சையில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.28: தஞ்சையில் ஒன்றிய அரசை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமண்டபம் அருகே உள்ள தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் தலைமை வகித்தார். அப்போது, மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். 150 ஆண்டு காலம் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்கள் 44ஐ நான்கு சட்ட தொகுப்பாக சுருக்கி, தொழிலாளர்களுக்கு விரோதமாக நடைமுறைபடுத்துவதை கைவிட வேண்டும். உத்திரபிரதேச மாநில மின்வாரியத்தில் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாய்ஸ் பெடரேசன் செயலாளர் மோகன்தாஸ், பொறியாளர் சங்க நிர்வாகி சுந்தர், பொறியாளர் கழக நிர்வாகி சிவக்குமார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் காணிக்கைராஜ், ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஐக்கிய சங்க நிர்வாகி பாரவேல் நன்றி கூறினார்.

Advertisement