தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், நவ.26: தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி, இளம் நெல் நடவு பயிருக்கு உரிய நிவாரண நிதி வழங்க தமிழக அரசை நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தீவிர அடைந்து இரவு பகலாக கனமழை பெய்தது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாபேட்டை, பல்லவராயன் பேட்டை, ஒரத்தநாடு, ஒக்கநாடு மேலையூர் திருவையாறு, நாகத்தி, பணவல்லி, ஆற்காடு, காட்டுகோட்டை என பல்வேறு இடங்களில் தற்போது சம்பா தாளடி நடவு செய்த இளம் நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்து உள்ளது. மேலும் ஒருவார காலமாக தண்ணீர் வடிய போதிய வடிகால் இல்லாததாலும், கிளை வாய்க்கால் தூர்வாரத நிலையில் பல ஆயிரம் ஏக்கர் நெல் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி போய் உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News