தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு

தஞ்சாவூர், அக்.25: தொடர்மழை எதிரொலியாக தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, பொன்னாவரை, அம்மன்பேட்டை, பள்ளி அக்ரஹாரம், மருங்குளம், குருங்குளம், கண்டிதம்பட்டு, கொல்லங்கரை வேங்கராயன் குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வாரம் 22 டன் வரத்து வந்த நிலையில் தற்போது 16 டன்னாக குறைந்து உள்ளது. அதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

அதன்படி, ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.56, தக்காளி ரூ.50க்கும், அவரைக்காய் ரூ.106க்கும், பாகற்காய் ரூ.50க்கும், ரூ.32க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.48க்கும், பீட்ரூட் ரூ.50க்கும், பீன்ஸ் ரூ.80க்கும், சவ்சவ் ரூ.24க்கும், முருங்கைக்காய் ரூ.100க்கும், காலிபிளவர் ரூ.66க்கும், முட்டைக்கோஸ் ரூ.40க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் காய்கறிகளை குறைந்த அளவில் வாங்கி சென்றனர்.

Advertisement