தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

 

Advertisement

கம்பம், ஜூன் 29: கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தி செல்வதை தடுப்பது குறித்து, கம்பத்தில் தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தி செல்வதை தடுக்கவும், ரேசன் அரிசியை கடத்துவோர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழக மற்றும் கேரள சிவில் சப்ளை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இடையே கலந்தாய்வு கூட்டம் கம்பம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, கேரள மாநிலம் பீர்மேடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.

கூட்டத்தில் இரு மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர், போலீசார் குழுவாக இணைந்து இரு மாநில சோதனை சாவடியில் காய்கறி வாகனங்கள், சரக்கு வானங்கள், மோட்டார் சைக்கிள்கள், பஸ் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்வது எனவும், மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி கடத்தும் வாகனங்களையும், அரிசி கடத்தல்காரர்களையும் அடையாளம் காட்டி தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. இதில் இருமாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News