தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தால் வளம் பெறும் தமிழகம் பொதுமக்கள் மகிழ்ச்சி ₹1756.57 கோடியில் 246 பணிகள் முடிவடைந்துள்ளது

கலசப்பாக்கம், பிப்.6: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வதால் தமிழகம் வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தார். மேலும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் 10 கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கினர். இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு, பணிகளை தேர்வு செய்யும் குழு, அனுமதி வழங்கிடும் உயர்நிலைக்குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டது.

Advertisement

கலெக்டர் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 1269 பணிகள் ₹14,524.18 கோடி மதிப்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு 246 பணிகள் ₹1756.57 கோடி மதிப்பில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், 665 பணிகள் ₹10404.98 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. 358 பணிகள் ₹2362.62 கோடி மதிப்பில் மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம், சிறுபாலம் புனரமைத்தல், தடுப்பணைகள், அணைக்கட்டுகள், சமுதாயக்கூடம், தரைமட்ட பாலம், நீர்வரத்து கால்வாய்கள், தொகுதியில் பல ஆண்டு காலமாக நிறைவேற்றப்படாத பணிகள் இத்திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்றப்படுவதால் கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெற்று வருகிறது. மேலும், தங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. அதேபோல் பொதுமக்கள் மனமகிழும் விதத்தில் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படுவதால் தமிழகம் வளம் பெற்று வருகிறது.

Advertisement

Related News