தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓரணியில் தமிழ்நாடு’மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது

 

கோவை, ஜூலை 2: கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியுள்ளது. இந்நிலையியல், உயர்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு ஒரு வாரகால அறிமுக பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நேற்று நடந்த பயிற்சியில் கல்லூரியின் முதல்வர் எழிலி வரவேற்றார்.

அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பவன்குமார் பங்கேற்று மாணவர்களிடம் பேசியதாவது: புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள்தான் உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் காலம். இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்லூரியின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் நம்மால் படிக்க முடியவில்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.

எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் பாதியில் படிப்பை நிறுத்தக்கூடாது. பிரச்னைகளை பாசிட்டிவாக எதிர்க்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பல சவால்கள் வரும். அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவுடன் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான முயற்சிகளில் ஈடுபடலாம். இவ்வாறு அவர் பேசினார்.