தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச பேருந்து பயண திட்டத்தால் குடும்ப வருமானம் சேமிக்கப்படுகிறது: அரசுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்

 

Advertisement

திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் கையெழுத்தாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இந்த திட்டம் தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்ற திருவள்ளூர் மாவட்ட பெண்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கிராமத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு தினமும் அரசு பேருந்தில் கட்டணமில்லா இலவச பயணம் மேற்கொள்ளும் தக்கோலத்தை சேர்ந்த கீர்த்திமா ஜெகதீசன் என்ற பெண் கூறியதாவது: நான் தக்கோலத்தில் இருந்து திருவள்ளூருக்கு பேருந்தில் பயணம் செய்ய மாதத்திற்கு ரூ.1000க்கு மேல் செலவாகும்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வரும் மகளிர்க்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகிறேன். இதனால் எங்களுடைய குடும்ப வருமானம் சேமிக்கப்பட்டு அதனை வேறு செலவிற்காக பயன்படுத்த முடிகிறது.

மேலும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் பெண்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு சிறப்பு திட்டமாகும். எனவே இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது சார்பிலும், திருவள்ளூர் மாவட்ட பெண்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Advertisement

Related News